TAMIL CINEMA

TOP &&& NEWS **

                         தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்


தமிழ் சினிமா > விசேட செய்தி > தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்
தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்ஜனவரி தமிழ் சினிமா, விசேட செய்ததமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

அனுப்பு
விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘தெறி’. இதில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்கும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘தெறி’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க இருக்கின்றன.

‘தெறி’ படத்தின் ‘டீசர்’ அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘தெறி’ படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேநாளில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘24’ படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா 3 ‘கெட்அப்’களில் நடிக்கிறார்.


விஜய்–சூர்யா படங்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மோதுவதால் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


           

                            அஜீத்துடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்?

அஜீத்தின் அடுத்த படத்தில் அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அஜீத் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறுத்தை சிவாவுடன் 3 வது முறையாக அஜீத் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிறுத்தை படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. சிறுத்தை திரைப்படம் வெற்றி பெற்றதால் சிறுத்தை என்னும் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டது.

தொடர்ந்து கோட் சூட் போட்டு கெத்து காண்பித்த அஜீத்தை கிராமத்து மனிதர் மற்றும் பாசமான அண்ணனாக இவர் காட்டிய வீரம் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றது. ஆக்ஷன்+ குடும்ப சென்டிமெண்டுடன் வெளியான வீரம் திரைப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

வீரம் வெற்றி பெற்ற பின்னர் 2 வது முறையாக அஜீத்துடன் இணைந்து வேதாளம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த வருடத் தீபாவளிக்கு வெளியான வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தற்போது நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

வீரம், வேதாளத்தைத் தொடர்ந்து 3 வது முறையாக அஜீத்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கப் போகிறார் என்று தகவல்கள் அடிபட்டு வருகின்றன. மேலும் இந்தப் படத்தில் அஜீத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். இன்னொரு படம் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சிறுத்தை சிவாவிடம் அஜீத் கூறியதும், வேதாளம் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்று அஜீத் மற்றும் சிறுத்தை சிவாவை சிவகார்த்திகேயன் சந்தித்ததும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போன்று உள்ளன.



                           ரம்ஜான் தினத்தில் கொடியை பறக்கவிடும் தனுஷ்



தனுஷ் தற்போது துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாமிலி ஆகியோர் நடிக்கின்றனர். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பொள்ளாச்சி, பழனி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ரம்ஜான் தேதியில் வெளியிடப் போவதாக சினிமா வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ரம்ஜான் தினத்தில் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. எனவே, இந்த படத்தையும் ரம்ஜான் தினத்தில் வெளியிட்டால் நல்ல வரவேற்பு இருக்கும் சென்டிமெண்டாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள புதிய படம் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், அடுத்த படத்துக்கு ரிலீஸ் தேதி அறிவித்திருப்பது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.




No comments:

Post a Comment

google98dbb8b5f3166a6a.htmlhttps://pushpad.xyz/projects/122/subscription/edithttp://latesttamilcinemakollywoodnews.blogspot.in/